search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் நீதிமன்றம்"

    ஜீவனாம்சம் பணத்தை கணவர் வழங்காததால் திருவள்ளூர் கோர்ட்டு முன்பு மகனுடன் 2-வது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் முதல் திருமணத்தை மறைத்து வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த மணிமேகலையை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் மகேந்திரனின் 2-வது திருமணம் பற்றி அறிந்ததும் அவரது முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதையடுத்து மணிமேகலை தனது மகனுடன் நெமிலிச்சேரியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மகேந்திரன் மீது போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் தொகையை மணிமேகலைக்கு, மகேந்திரன் வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை மணிமேகலைக்கு ஜீவனாம்சம் தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை இன்று காலை மகன் வேல்முருகனுடன் திருவள்ளூர் கோர்ட்டுக்கு வந்தார். திடீரென இருவரும் கோர்ட்டு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #TiruvallurCourt
    போலீஸ் பிடியில் உள்ள காதலனை விடுவிக்ககோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வயலார் நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரும் திருமழிசையை சேர்ந்த எபினேசர் ராஜனும் காதலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எபினேசர் ராஜனை ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக வெள்ளவேடு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் சங்கீதா, போலீஸ் நிலையத்துக்கு வந்து எபினேசர் ராஜனை விடுவிக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே எபினேசர் ராஜனை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று நினைத்து சங்கீதா இன்று காலை கோர்ட்டுக்கு வந்தார்.

    அப்போது திடீரென அவர், எபினேசர் ராஜனை விடுவிக்க வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வேன் என்று கூச்சலிட்டபடி கோர்ட்டு வளாக மாடிக்கு ஏற முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர்.

    உடனே சங்கீதா மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் திருவள்ளூர் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
    ×